நாத்திகம் என்பதன் உண்மை தன்மை அறியாத பலர் நாத்திக கொள்கை என்பது கருஞ்சட்டைக்காரர்களின் கடவுள் மறுப்பு கொள்கை மட்டும்தான் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அறிவியல் ஒரு பொருளின் உண்மைத்தன்மையை அறிவுறுத்துகிறது. நாத்திகம் என்பதும் உண்மையை அறிய அறிவுறுத்துகிறது. ஆகவே அறிவியலும், நாத்திகமும் ஒரே கருத்தை வலியுறுத்துகின்றன.ஆனால் அறிவியல் உண்மைத்தன்மையை விளக்குகிறது. நாத்திகம் உண்மைத்தன்மையை விளக்குவதுடன் மனிதனை மனிதனாக்குகிறது. ஆசியா கண்டத்திலேயே நாத்திகம் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது தந்தை பெரியார் என்ற மாமனிதனின் பெயராகும். தந்தை பெரியார் ஒரு தனிமனித இராணுவம் போல செயல்பட்டு வெற்றி கண்டதன் விளைவாக அவர் தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படுகிறார்.தந்தை பெரியார் பகுத்தறிவை நேசிக்கும் ஒரு நாத்திக தந்தை. அவர் சமுதாயத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளை வேரோடும், வேரடிமண்ணோடும், பெயர்த்தெறிந்த கடப்பாரை! அனைவராலும் போற்றப்பட்ட ஒரு சமுதாய சீர்திருத்தவாதி ஆவார்.